Month: நவம்பர் 2019

புதிய இராஜாங்க அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும்  ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 35 இராஜாங்க அமைச்சர்களும் 03 பிரதி அமைச்சர்களும் இன்று (27) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு. 1. கௌரவ சமல் ராஜபக்ஷ – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் 2. கௌரவ வாசுதேவ நாணயக்கார – நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் 3. கௌரவ காமினி லொகுகே – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் 4. கௌரவ மஹிந்த…

அனைத்து மக்களும் இன்று சுபீட்சமும் ஒழுக்கப் பண்பாடுமிக்க நாடு குறித்த எதிர்பார்ப்புடன் இருப்பதாக சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் தெரிவிப்பு

கி.பி 309 முதல் 322 வரை ஆட்சியில் இருந்த கோட்டாபய மன்னருக்குப் பின்னர் மீண்டும் ஒரு கோட்டாபய நாட்டுக்கு கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், அவர் அறம் சார்ந்தும் சட்டத்தை மதித்தும் நாட்டை ஆட்சி செய்து சுபீட்சமும் ஒழுக்கப் பண்பாடுமிக்க ஒரு நாட்டை கட்டியெழுப்புவார் என நாட்டிலுள்ள அனைத்து மக்களும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக கலாநிதி சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் தெரிவித்தார். மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (24) பிற்பகல் கொட்டாவ, ருக்மலே தர்ம விஜயாலோக்க…

நாட்டை சரியான திசைக்கு கொண்டுவரும் முதல் எட்டில் மக்கள் வெற்றிபெற்றுள்ளதாக சங்கைக்குரிய பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய  பெல்லன்வில தம்மரத்தன நாயக்க தேரர் தெரிவித்தார். சவால்களுக்கு பயப்படாத ஜனாதிபதி அவர்களுக்கு நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய ஆற்றல் உள்ளது என்று குறிப்பிட்ட தேரர் அவர்கள், அதற்காக பொறுமையுடன் ஜனாதிபதி அவர்களுக்கு காலத்தையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமென்று குறிப்பிட்டார். மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (24) பிற்பகல் பெல்லன்வில ரஜமகா விகாரைக்குச்…

மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (22) பிற்பகல் கல்கிஸ்ஸ தர்மபாலாராம விகாரையில் அமரபுர நிக்காயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். நாடு முகங்கொடுத்துள்ள நிலைமைகளில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு ஜனாதிபதி அவர்களுக்கு சக்தியும் தைரியமும் கிடைக்க வேண்டுமென பிரார்த்தித்த தம்மாவாச தேரர், புதிய ஜனாதிபதி அவர்கள் தடைகளை கடந்து பெரும் பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளதெனக் குறிப்பிட்டார். அமரபுர நிக்காயவின் மகாசங்கத்தினர், விகாரையின் நிர்வாக சபை உள்ளிட்டோர்…

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லா (Riaz Hamidullah) இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்த உயர் ஸ்தானிகர், ஜனாதிபதி அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.    

மறைந்த முன்னாள் பிரதமர் டி. எம். ஜயரத்ன அவர்களின் பூதவுடலுக்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (22) இறுதி அஞ்சலி செலுத்தினார். கம்பொல தொலுவயிலிருந்து விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட அன்னாரின் பூதவுடல் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர்களின் இறுதி அஞ்சலிக்காக பாராளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டதுடன், அங்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்…

இலங்கைக்கான அமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலியானா டெப்லிட்ஸ் (Aliana Teplitz) இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின் கெலீ (Martin Kelly), அரசியல் செயற்பாடுகளுக்கான தலைவர் என்டனி ரென்சுலி (Anthony Renzulli) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், இருதரப்பினரும் இதன்போது சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதனிடையே இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அகிரா (Sugiyama Akira) இன்று ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய…

புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

புதிய அமைச்சர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு. 1.   கௌரவ மஹிந்த ராஜபக்ஷ – நிதி, பொருளாதார அலுவல்கள், கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், கலாசாரம், நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு வசதிகள் அமைச்சர் 2.   கௌரவ நிமல் சிறிபால டி சில்வா – நீதி, மனித உரிமை மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் 3.   கௌரவ…

மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவியேற்பு

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (21) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்களும் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தனது கட்சி வேட்பாளரின் தோல்வியைத் தொடர்ந்து, புதிய ஜனாதிபதியின் தலைமையில் அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவிடும் வகையில் முன்னாள் பிரதமர் விக்ரமசிங்க…

ஆறு புதிய ஆளுநர்கள் பதவியேற்பு

ஆறு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இன்று (21) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு ராஜா கொல்லுரே –       ஊவா மாகாண ஆளுநர் சீதா அரம்பேபொல –       மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் –       வடமேல் மாகாண ஆளுநர் லலித் யு.கமகே         –       மத்திய மாகாண ஆளுநர் வில்லி கமகே         –       தென் மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ –       சபரகமுவ மாகாண ஆளுநர்  …