Month: டிசம்பர் 2019

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை மீறும் விற்பனை நிலையங்கள் தொடர்பில் தொடர்ந்தும் தேடுதல்கள்

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் இலங்கை பொலிஸார் ஒன்றிணைந்து அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் பற்றிய தேடுதல்களை தற்போது ஆரம்பித்துள்ளனர். அண்மையில் நுகரவோர் பாதுகாப்பு அதிகார சபையினால் உள்நாட்டு சம்பா மற்றும் நாட்டரிசி ஒரு கிலோகிராமிற்கான அதிகபட்ச சில்லறை விலை 98 ரூபாய் என வர்த்தமானியினூடாக அறிவித்தல் விடுக்கப்பட்டது. நேற்று மற்றும் இன்றைய தினங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 1430 அரிசி விற்பனை நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவற்றுள் கட்டுப்பாட்டு…

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி உறுதி

தம்மை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்புகள் உயர்ந்தபட்சமாக நிறைவேற்றப்படும் என மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். “மக்கள் இரண்டு பிரதான நோக்கங்களுடனேயே எனக்கு வாக்களித்தனர். தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்வது அவற்றுள் முதன்மையானதாகும். மற்றையது துரித பொருளாதார அபிவிருத்தியினூடாக சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதாகும். இந்த குறிக்கோள்களை அடைவதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதே எனது எதிர்பார்ப்பாகும்.” என அவர் மேலும் தெரிவித்தார். இன்று (19) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி…

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி உறுதி…

தம்மை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்புகள் உயர்ந்தபட்சமாக நிறைவேற்றப்படும் என மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். “மக்கள் இரண்டு பிரதான நோக்கங்களுடனேயே எனக்கு வாக்களித்தனர். தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்வது அவற்றுள் முதன்மையானதாகும். மற்றையது துரித பொருளாதார அபிவிருத்தியினூடாக சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதாகும். இந்த குறிக்கோள்களை அடைவதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதே எனது எதிர்பார்ப்பாகும்.” என அவர் மேலும் தெரிவித்தார். இன்று (19) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி…

அரிசி மற்றும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட ஏனைய அத்தியாவசிய பொருட்கள் மீது அதிகபட்ச சில்லறை விலையை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி உறுதி…

இந்த பண்டிகை காலப்பகுதியில் அரிசி மற்றும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட ஏனைய அத்தியாவசிய பொருட்கள் மீது பிரகடனப்படுத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை அமுல்படுத்தி, சந்தைக்கான இடையறாத விநியோகத்தை உறுதிசெய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அண்மையில் இவ் அதிகார சபை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையாக கிலோ ஒன்றிற்கு 98 ரூபாவாக வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுத்திருந்தது. பிரதான விநியோகஸ்தர்களுடன் கலந்துரையாடியும் நாட்டின்…

ஜனாதிபதி நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம்…

மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (18) மாலை சுமார் 07.30 மணியளவில் நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், அத்தியாவசிய நுகர்வுப்பொருட்களின் விலைகளில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து ஜனாதிபதி அவர்கள் இதன்போது விசேட கவனம் செலுத்தினார். அங்கிருந்தவாறே நிதியமைச்சு மற்றும் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி அவர்கள், வரிச் சலுகைகளின் நன்மைகள் உரிய முறையில் வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் கிடைக்கின்றதா என்பது…

அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஜனாதிபதியின் வெளியுறவுகளுக்கான மேலதிக செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார்

மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது வெளியுறவுகளுக்கான மேலதிகச் செயலாளர் பதவிக்கு சர்வதேச உறவுகளில் நிபுணரான அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்களை நியமித்துள்ளார். அட்மிரல் கொலம்பகே இலங்கை கடற்படையில் 36 வருடங்கள் சேவையாற்றி, 2014ஆம் ஆண்டு ஜூலை 01ஆம் திகதி கடற்படை தளபதியாக ஓய்வு பெற்றார். அட்மிரல் கொலம்பகே இலங்கை கடற்படையின் 18வது தளபதியாவார். கடற்படையில் அவர் ஆற்றிய சேவைகளுக்காக பல்வேறு விருதுகளையும் பராட்டுக்களையும் பெற்றுள்ளார். கடற்படையிலிருந்து ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து பாத்பைண்டர் நிறுவனத்தில் இந்திய…

வறுமையை இல்லாதொழிக்கும் நோக்கில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் செயற்திட்டம் ஜனவரி 15 இல் ஆரம்பம்

குறைந்த வருமானம் பெறுபவர்களை உயர் வருமானம் பெறுபவர்களாக மாற்றுவது அடிப்படை நோக்கமாகும் குறைந்த கல்வித் தகைமைகள் கொண்ட தொழில் நிபுணத்துவமற்ற ஏழை மக்களுக்கும் தொழிற் தகுதிகளை பெற்றுக்கொடுத்தல் தாம் வசிக்கும் பிரதேசத்திலேயே வேலை வாய்ப்பு மாதாந்தம் 35,000 ரூபா சம்பளம் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமைய பல்நோக்கு அபிவிருத்தி செயலணியொன்றினை அமைப்பதற்கான முதலாவது கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18) முற்பகல் இடம்பெற்றது. மிகவும் வறிய மட்டத்தில் வாழ்ந்துவரும் சமூர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி பெற்ற ஆயினும்…

ஜனாதிபதி செயலகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல் பாவனையை தடைசெய்ய மேற்கொண்ட தீர்மானத்திற்கு சுற்றாடல் அமைப்புக்கள் பாராட்டு

ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்துகொள்பவர்களின் பாவனைக்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களை வழங்குதல் நீண்டகாலமாகவே இடம்பெற்றுவரும் வழக்கமாகும். இதனால் ஏற்படக்கூடிய பாரதூரமான சுற்றாடல் தாக்கங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், இவ்வாறு குடிநீர் போத்தல்கள் வழங்குதலை தடைசெய்வதற்கும் அதற்குப் பதிலாக கண்ணாடிக் குவளைகளில் நீர் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார். இதனூடாக இதுவரை காலமும் ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் சுற்றாடலில் ஒன்றுசேர்வது பெருமளவு குறைவடையும்.…

அரசாங்கத்தை சரியான பாதையில் வழிநடத்துவதற்கு ஊடகங்களும் அரசின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கலாம் –  ஜனாதிபதி

வினைத்திறன்மிக்க மக்கள் நேய அரச சேவைக்கான பொறுப்புக்கள் துரிதமாக நிறைவேற்றப்பட வேண்டும். எம்சிசி ஒப்பந்தம் பற்றி ஆராய்வதற்கு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படும். அதிகாரப் பகிர்வினைக் காட்டிலும் அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தினை ஏற்படுத்த வேண்டியதே அவசியமாகும். நாட்டின் அனைத்து துறைமுகங்களும் இலங்கை அரசாங்கத்தின் கீழ் செயற்படுதல் வேண்டும். அரசாங்கம் ஒன்றினை சரியான பாதையில் வழிநடத்த ஊடகங்களும் அழுத்தங்களை பிரயோகிக்க முடியுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். விமர்சனங்களை எதிர்பார்க்கும் அதேவேளை, அவை அரசாங்கத்தின் பயணத்திற்கு பக்கபலமாக அமையுமென…

இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க சுவிட்சர்லாந்து உறுதி

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக் (Hanspeter MOCK) இன்று (16) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். அண்மையில் ஜனாதிபதி அவர்கள் பெற்றுக்கொண்ட தேர்தல் வெற்றி தொடர்பில் தனதும் தமது அரசாங்கத்தின் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்த தூதுவர், “நான் அனைத்து இலங்கையர்களினதும் ஜனாதிபதி ஆவேன்” என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டமையை தான் மிகவும் பாராட்டுவதாகக் குறிப்பிட்டார். “இலங்கையுடனான தொடர்புகள் பலமாகவும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் பயனுள்ள வகையில் காணப்படுதல் தொடர்பில் சுவிட்சர்லாந்து…