Month: பிப்ரவரி 2020

ஆனந்தா கல்லூரியின் “07 மாடிக் கட்டிடம்” ஜனாதிபதியினால் மாணவர்களிடம் கையளிப்பு…

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் புதிய “07 மாடிக் கட்டிடம்” இன்று (07) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஆனந்தா கல்லூரி உருவாக்கிய முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தனது பாடசாலை பருவத்தின் நடைமுறைகளுக்கு முன்னுரிமையளித்து ஜனாதிபதி அவர்கள் முதலில் அங்குள்ள விகாரைக்குச் சென்று வழிபட்டார்.…

Pension Accounting IFRS vs. US GAAP An article may have various purposes, but the simple structure is exactly the same regardless of what. Compose an essay that’s meaningful and well-informed on the issue available. You will find scholarships all around the web and a few simply need a 500 word essay. Some individuals and productive…

How to Study a Document We’re conscious that academic writing hasn’t been a simple tactic. In-general, this is actually the time necessary for the creating guidance consequences to occur. You’re going to view you can find distinct composition publishing providers, therefore it is important to select the finest one. You don’t wish to realize reduced…

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி செயலாளர் அலுவலத்தின் பணிப்பாளர் நாயகம் நந்த மல்லவஆரச்சி கடைமைகளை பொறுப்பேற்றார்

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்தமல்லவஆரச்சி அவர்கள் இன்று (07) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார். கொழும் 01, செதம் வீதி, இலக்கம் 17 இல் அமைந்துள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தில்  இந்நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திற்கமைய “வறுமையற்ற இலங்கை” யைக் கட்டியெழுப்பும் எண்ணக்கருவினை செயற்படுத்துவதற்காக பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டிய சிறி வஜிராராமையின் விகாராதிபதி  சங்கைக்குரிய…

பாதிக்கப்பட்ட சீன மக்களுக்கு இலங்கையின் அன்பளிப்பு…

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீன மக்களுக்காக உலகப்புகழ் பெற்ற ஒரு தொகை சிலோன் பிலெக் டீ நேற்று (06) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டது. சீனத் தூதுவர் செங்க் சியுஆன் (cheng Xueyuan) அவர்களிடம் இத்தேயிலை தொகுதி கையளிக்கப்பட்டது. இக்கட்டான இச்சந்தர்ப்பத்தில் சீன அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இலங்கை அரசாங்கமும் நாட்டு மக்களும் வழங்கிய ஆதரவுக்கு சீன ஜனாதிபதி சீ ஜிங் பிங் அவர்களினதும் சீன அரசாங்கத்தினதும் சார்பாக தூதுவர் நன்றியைத்…

கடந்த காலத்தை குற்றம்சாற்றிக் கொண்டிருக்காது நாட்டை கட்டியெழுப்ப தயாராகுங்கள் – ஜனாதிபதி.

கடந்தகாலம் மற்றும் பிரச்சினைகளை நோக்கி விரல் நீட்டிக் கொண்டிருப்பதைவிடுத்து வீழ்ச்சியுற்றிருக்கும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நாட்டை கட்டியெழுப்பும் சவாலை தான் பொறுப்பேற்றது பொருளாதாரம் விழ்ச்சியுற்றுள்ளதென்ற தெளிவுடனேயே ஆகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார். இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் பெருந்தோட்ட மற்றும் நிதி நிறுவன தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். “நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின்…

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்…

பெப்ரவரி 14ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்… 12.31ஆம் திகதியன்று 35 வயதிற்கு குறைவானவராக இருத்தல் வேண்டும்… ஒரு வருட பயிற்சி காலப்பகுதியில் 20,000 ரூபா கொடுப்பனவு… மாவட்ட மட்டத்தில் நியமனங்கள்… தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காக பணி செய்யும் கலாசாரமொன்றை ஏற்படுத்தும் வகையில் இளம் தலைமுறையினரை பேண்தகு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நம்பகமாகவும் தர்க்கபூர்வமான அடிப்படையிலும் பங்களிக்கச் செய்வது இதன் நோக்கமாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

ரஷ்ய இராணுவ தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு

ரஷ்ய இராணுவ தளபதி சல்யுகோ ஒலேக் (Saliukov Oleg) இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். கடந்த 03ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த அவர், 72வது தேசிய சுதந்திர தின விழாவில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டார். ஜெனரல் ஒலேக் அவர்களுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கடந்த அரசாங்கத்தின் பிழையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக முழு பொருளாதாரமும் செயலிழந்திருப்பதாக அரசாங்கம் தெரிவிப்பு

2019 நவம்பர் 20ஆம் திகதி வரை நாட்டை ஆட்சி செய்த அரசாங்கத்தின் தூரநோக்கற்றதும் வினைத்திறனற்றதுமான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக முழு பொருளாதாரமும் செயலிழந்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது விவசாயம், இலவச சுகாதார சேவை, நிர்மாணக் கைத்தொழில், உணவுப் பொருட்கள் விநியோகம், தேயிலைக் கைத்தொழில், அரிசி உற்பத்தி போன்ற முக்கிய துறைகளின் வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளது. பொருளாதாரம் செயலிழந்திருப்பதற்கு அடிப்படை காரணம் சேவைகளுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படாதிருந்தமையாகும். கடந்த அரசாங்கம் 2019ஆம் ஆண்டிற்காக அனுமதிக்கப்பட்டிருந்த வரவுசெலவு மதிப்பீடுகளில் உள்ளடங்கியிருந்த…

தேசிய வர்த்தக கொள்கையொன்றுக்கான முன்மொழிவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (03) பிற்பகல் கொழும்பு -07 தொழில் வல்லுனர் சங்க மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. சர்வதேச வர்த்தகத்திற்காக தேசிய வர்த்தக கொள்கையொன்றை வகுக்க வேண்டிய தேவை குறித்து நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. அதற்காக தொழில் வல்லுனர்களின் தேசிய முன்னணியினால் மக்கள் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இவ் ஆணைக்குழுவிற்கு பல்வேறு தரப்பினரும் வழங்கிய கருத்துக்களின் சாராம்சம் இந்த முன்மொழிவில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தொழில் வல்லுனர்களின் தேசிய முன்னணியின்…