Month: ஏப்ரல் 2020

நாளை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்

விடுமுறையில் சென்றுள்ள முப்படை அதிகாரிகளை முகாம்களுக்கு அழைப்பதனை இலகுபடுத்தும் வகையில் நாளை 27, திங்கள் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் 28, செவ்வாய் அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 8.00மணி முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்ட நடைமுறைகளுக்கு மத்தியில் மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மே மாதம் 04ஆம் திகதி திங்கள் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும். அதன் பின்னர் மே 01, வெள்ளிக் கிழமை வரை இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இரவு 8.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை மட்டுமே அமுலில் இருக்கும். கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம மாவட்டங்களில் அரச, தனியார் துறை நிறுவனங்கள் ஊரடங்கு சட்டம்…

அரசியலமைப்புக்கு வெளியே எந்தவொரு தீர்மானத்திற்கும் வரவேண்டியதில்லை என மகாசங்கத்தினர் தெரிவிப்பு

Ø  அனர்த்தத்தின் போது தைரியமாயிருத்தல் ஒரு நாடு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் Ø  இலத்திரனியல் ஊடகங்களை பயன்படுத்தி தேசிய வெசாக் விழாவை கொண்டாட நடவடிக்கை Ø  விகாரைகளுக்கு சொந்தமான, பயன்படுத்தாத காணிகளின் அபிவிருத்திக்கு உதவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை Ø  இரண்டு சந்தர்ப்பங்களில் மக்களை பாதுகாத்த தலைவர் என்றவகையில் ஜனாதிபதி வரலாற்றில் இடம்பெறுவதாக மகா சங்கத்தினர் தெரிவிப்பு Ø  ஓவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை சந்திப்புக்கு மகாசங்கத்தினருக்கு ஜனாதிபதி அழைப்பு கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய…

கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 848 மில்லியனாக அதிகரிப்பு

நிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 848 மில்லியனாக அதிகரித்துள்ளது. பேராதனை, கெட்டம்பே ராஜோபவனாரமாதிபதி சங்கைக்குரிய கெப்படியாகொட சிறிவிமல தேரர் நிதியத்திற்கு ஒரு மில்லியன் ரூபாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தார். லங்கா மினரல் சேன்ட்ஸ் நிறுவனம் 10மில்லியன் ரூபா, ஜே.எச்.எம்.டீ. அபேசிங்க மற்றும் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் தலா ஒரு மில்லியன் ரூபா, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 5.4மில்லியன் ரூபா, இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சியப்படுத்தல் நிறுவனம் 6.2 மில்லியன் ரூபா மற்றும் இலங்கை தொழிநுட்ப அபிவிருத்தி சபை 05 லட்சம் ரூபாவும்…

பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கு ஜனாதிபதி செயலணி

பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்துள்ளார். அரசியலமைப்பின் 33வது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இச்செயலணி அமைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் பரவியுள்ள கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார, சமூக சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தி பொருளாதார புத்தெழுச்சியை திட்டமிடுதல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய பொறுப்புகள் இச்செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளன. ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கொள்கைகளை அடிப்படையாக கொண்டு புதிய வாயில்களின்…

கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 37 மில்லியன் ரூபா அன்பளிப்பு

Ø  வைப்பு மீதி 822 மில்லியனாக அதிகரிப்பு நிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 822 மில்லியனாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் தலைமை சங்கநாயக்க தேரர் சங்கைக்குரிய பெல்லன்வில தம்மரத்ன தேரர் 05மில்லியன் ரூபாவும், மஹரகம சாசன சேவை சங்கம் மற்றும் வொஷிங்டன் பௌத்த விகாரைகளின் 05 மில்லியன் ரூபா, வட அமெரிக்காவின் தலைமை சங்கநாயக்க தேரர் சங்கைக்குரிய மகரகம தம்மசிறி தேரர், பிரான்ஸ் தலைமை சங்கநாயக்க தேரர் சங்கைக்குரிய பரவாஹெர சந்திரரத்ன தேரர் அன்பளிப்பு செய்த ஒரு மில்லியன் ரூபா, அதன் செயலாளர் மகிந்த…

கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு டொயொடா லங்கா நிறுவனம் 2 பஸ் வண்டிகள் அன்பளிப்பு

கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக டொயொடா லங்கா தனியார் நிறுவனம் 20 மில்லியன் பெறுமதியான இரண்டு பஸ் வண்டிகளை அன்பளிப்பு செய்துள்ளது. இரண்டு பஸ் வண்டிகளும் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து டொயொடா லங்கா தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ சபை உறுப்பினர்களினால் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர மற்றும் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இலங்கை மருந்துப்பொருள் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் உத்பல இந்திரவங்ஷ மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர்…

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 785 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பு

நிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 785 மில்லியன் ரூபாவை கடந்துள்ளது. அனுமதி பெற்ற விமான பொறியியலாளர்கள் சங்கம் 1.5 மில்லியன் ரூபாவும், கிலக்சோ ஸ்மித் கிளைன் மருந்துப்பொருட்கள் நிறுவனமும் விஜய உற்பத்தி தனியார் நிறுவனமும் தலா 05 மில்லியன் ரூபாவும், நிஷிகோ சர்வதேச தனியார் கம்பனி, பீபல்ஸ் காப்புறுதி நிறுவனம் மற்றும் ரஷ்ய கல்வி மத்திய நிலையம் தலா ஒரு மில்லியன் ரூபாவும் கெமுனு ஹேவா ரெஜிமன்ட் சேவை சங்கம் ஐம்பதாயிரம் ரூபாவும் இன்று (21) நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டன.…

அத்தியாவசிய சேவைகள் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு

ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியதன் பின்னர் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் குறைந்தளவானோரின் பங்குபற்றுதலுடன் அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அரச மற்றும் தனியார் துறைகளின் சேவைகளை மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலையில் பேணுவதற்கு உதவும் வகையில் திட்டமிடுமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். அத்தியாவசிய சேவைகளை வழங்கும் முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…

கொரோனா ஒழிப்பு மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

கொரோனா ஒழிப்பு மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை அடிப்படையாகக் கொண்டு மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க அவர்கள் மேற்கொண்ட நேர்காணல் வணக்கம் ஜனாதிபதி அவர்களே, நோய்நொடிகள் இல்லாத, சுபீட்சமானதொரு புத்தாண்டுக்கான பிரார்த்தனைகளுடன் உங்களை வரவேற்கின்றேன். அனைத்து இலங்கையர்களுக்கும் நோய் நொடிகள் இல்லாத மகிழ்ச்சி நிறைந்த புத்தாண்டுக்காகவும் நான் பிரார்த்திக்கின்றேன். இன்றைய நிலையில் கொவிட் 19 நோய்த்தொற்று காரணமாக சாதாரண மக்கள் வாழ்க்கையில் நாம் முன்னெப்போதும் அனுபவித்திராத பாரிய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.…