Month: ஏப்ரல் 2020

பொருளாதார புத்தெழுச்சி மூலோபாய திட்டம் இவ்வார இறுதியில் வெளியிடப்படும்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவந்து பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக திட்டமிடப்பட்டுள்ள மூலோபாய திட்டம் இவ்வார இறுதியில் வெளியிடப்படும்.

சிங்கப்பூர் நன்கொடையாளர்களினால் கொரோனா ஒழிப்புக்கு சுகாதார உபகரணங்கள் அன்பளிப்பு

சிங்கப்பூர் மகாகருணா பௌத்த சங்கத்தின் தலைவரும் லங்காராமாதிபதியுமான சங்கைக்குரிய கே.குணரத்ன தேரர், இலங்கை உயர் ஸ்தானிகர் சஷிகலா பிரேமவர்த்தன மற்றும் Humanity Matters சங்கத்தின் தலைவர் Ong Keng Yong கொவிட் 19 வைரஸ் ஒழிப்புக்கு அன்பளிப்பு செய்த சுகாதார உபகரணங்கள் தொகுதி இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்திற்கு கையளிக்கப்பட்டது. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வெப்பமானி போன்ற உபகரணங்களைக் கொண்ட இதன் பெறுமதி 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். சர்வதேச விவாகரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரோஹண அபேவர்த்தன ஆகியோர் இந்த…

கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு இன்று 48மில்லியன் ரூபா அன்பளிப்பு

Ø  வைப்பு மீதி 703 மில்லியனாக அதிகரிப்பு நிறுவன, தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதகாப்பு நிதியத்தின் மீதி 703 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் மார்ச் மாதம் 23ஆம் திகதி தாபிக்கப்பட்டது. கங்காராம வெசக் நிதியத்திலிருந்து 10 மில்லியன் ரூபாவும் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் சங்கம் அன்பளிப்பு செய்த 2.5 மில்லியன் ரூபாவை கலாநிதி…

இன்னும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம்…

Ø  அனைத்து நடவடிக்கைகளின் போதும் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு முதலிடம் Ø  இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை Ø  புதிய பொருளாதார முறைமையொன்றை கட்டியெழுப்பும் பொறிமுறையை அமைக்கும் பொறுப்பு அமைச்சுக்களுக்கு இன்னும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீண்டும் ஆரம்பித்து நாளாந்த நடவடிக்கைகளை விரைவில் இயல்புநிலைக்கு கொண்டுவரவேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டுள்ளார். தேசிய பொருளாதாரத்தையும் மக்கள் வாழ்க்கையையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் அடுத்த கட்ட பணிகள்…

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் முகாமைத்துவ குழு ஒன்றுகூடியது

Ø  நிதியத்தின் வைப்பு மீதி 655 மில்லியனாக அதிகரிப்பு கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தை முகாமைத்துவம் செய்யும் முகாமைத்துவ குழு இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடியது. மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யு. லக்ஷ்மன் இக்குழுவிற்கு தலைமைவகிக்கின்றார். ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமை நிதி அதிகாரி ரவிந்திர ஜே.விமலவீர நிதியத்தின் செயலாளராக உள்ள அதேநேரம் அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவனத் தலைவர்கள் உள்ளிட்ட 16பேர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். நிதியத்திற்கு பல்வேறு தரப்பிடமிருந்து நிதி உதவிகள் கிடைக்கப்பெற்று வருகின்றன. இந்த நிதியத்தை தாபித்ததன் மூலம் ஜனாதிபதி அவர்கள்…

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, ஏப்ரல் 16 வியாழன் காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டு பிற்பகல் 04.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும். இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 20 திங்கள் காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும். 20ஆம் திகதி காலை 6.00 மணிக்கு பின்னர் ஊரடங்கு சட்டம்…

தேசிய பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு மாகாண மட்டத்தில் நாளாந்த செயற்பாடுகளை ஆரம்பிக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு

Ø  தற்போதைய நிலைமைகளை தளர்த்துவது குறித்த முடிவுகள் சுகாதாரத் துறையின் பணிப்புரையின் பேரில்… தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நாளாந்த பொருளாதார செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்கக் கூடிய வாய்ப்புகளை கண்டறியும் நோக்குடன் மாகாண மட்டத்தில் தகவல்களை கேட்டறிவதற்கான விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. நாட்டின் அனைத்து மாகான வைத்திய பணிப்பாளர்கள் உள்ளிட்ட சுகாதார துறை அதிகாரிகள் தமது மாகாணங்களின் தற்போதைய நிலைமை குறித்து இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு…

அரச, தனியார்  ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலம் ஏப்ரல் 20 வரை நீடிப்பு

கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலம் ஏப்ரல் 20 திங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் மே மாதம் 11 ஆம் திகதி திங்களன்று திறக்கப்படவுள்ளன. பாடசாலை நடைபெறாத காலப்பகுதியில் மாணவர்களுக்கு முடியுமானளவு தொலைக்கல்வி வசதிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில்…

ஜனாதிபதி அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

எமது தேசத்தின் கலாசார தனித்துவத்தை எடுத்துக்காட்டும் மிகவும் சிறப்புவாய்ந்த தேசிய கலாசார விழாவான சிங்கள, தமிழ் புத்தாண்டு மலர்ந்துள்ள இவ்வேளையில், பிறந்திருக்கும் புத்தாண்டு இலங்கை வாழ்  அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்ததாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன். சூரியன் மேஷத்தில் பிரவேசிப்பதுடன் மலரும் புத்தாண்டு மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் பரஸ்பர உறவுகளை வளர்த்துக்கொள்வதற்குமான தருணமாகும். எவ்வாறான போதும், எதிர்பாராதவிதமாக உலகெங்கிலும் பரவிவரும் நோய் வைரஸ் எமது நாட்டிலும் பரவிவருவதன் காரணமாக எமது முன்னோர்கள் காலத்திலும் கேட்டிராத அனர்த்தங்களுக்கு…

ஜனாதிபதி அவர்களின் உயிர்த்த நாள் வாழ்த்துச் செய்தி

இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுடன் இணைந்து, மனித இனத்தை பாவங்களில் இருந்து விடுவிப்பதற்காக இயேசு நாதர் சிலுவையில் தனது வாழ்வை அர்ப்பணித்து உயிர்த்தெழுந்த உயிர்ப்புப் பெருவிழாவை இன்று பக்தியுடன் நினைவுகூர்கின்றனர். தனது ஆன்மாவையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்திக்கொள்வது இதன் முக்கிய நோக்கமாகும். கிறிஸ்தவ பக்தர்கள் இயேசுவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்ப்பை நினைவுகூர்ந்து ஆன்மீக கிரியைகளில் ஈடுபடுகின்றனர். அதன் மூலம் வளர்த்துக்கொள்ளும் அமைதியும் சாந்தமும், நாட்டில் உள்ள ஏனைய சகோதர இனங்களுக்கிடையிலான அன்பு, சமாதானம்…