Day: April 22, 2021

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது முற்றாக நிறுத்தப்படும் …  அதிக விளைச்சலை பார்க்கிலும் உயிர்கள் எனக்கு மிகவும் பெறுமதியானது – ஜனாதிபதி

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது மிக விரைவில் முற்றாக நிறுத்தப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக விளைச்சலை பெற முடியும். குளங்கள், கால்வாய்கள் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதால் உயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை அந்த இலாபத்தால் ஈடுசெய்ய முடியாது. இரசாயன உரங்களின் தாக்கம் சிறுநீரக நோய் உட்பட பல தொற்றா நோய்களுக்கு வழிவகுத்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். சிகிச்சைக்காக செலவாகும் தொகை மற்றும் உயிர்களுக்கு ஏற்படும்…

ஸ்ரீ சத்தம்மவங்ச மகா நிக்காயவின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய திக்வெல்லே திஸ்ஸ தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை…

காலஞ்சென்ற அமரபுர ஸ்ரீ சத்தம்மவங்ச மகா நிக்காயவின் அனுநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய திக்வெல்லே திஸ்ஸ தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார். பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் வெவுருகன்னல புதுரஜ மகா விகாரைக்கு இன்று (22) முற்பகல் சென்ற ஜனாதிபதி அவர்கள், தேரரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், விகாரையில் வைக்கப்பட்டிருக்கும் அனுதாப பதிவேட்டிலும் குறிப்பொன்றை பதிவு செய்தார். அமரபுர ஸ்ரீ சத்தம்மவங்ச மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய அஹூங்கல்லே ஸ்ரீசீல…