பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கு ஜனாதிபதி செயலணி

பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்துள்ளார். அரசியலமைப்பின் 33வது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இச்செயலணி அமைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் பரவியுள்ள கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார, சமூக சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தி பொருளாதார புத்தெழுச்சியை திட்டமிடுதல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய பொறுப்புகள் இச்செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளன. ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கொள்கைகளை அடிப்படையாக கொண்டு புதிய வாயில்களின் … Continue reading பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கு ஜனாதிபதி செயலணி